This is a Clilstore unit. You can .
வணக்கம்! என் பெயர் தாரணி! நான் தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் அவிநாசியில் ஆங்கிலத்துறை தலைவராக பணிபுரிந்து வருகிறேன். இங்கே ஷில்லாங்கில் வடகிழக்கு மலைப்பிரதேச பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்கில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்க வந்துள்ளேன்.
இந்தக் கருத்தரங்கில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தலித் பெண் எழுத்தாளர் பாமா அவர்களின் மொழிப்பயன்பாடு பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து இருக்கிறேன். அவர்களின் வட்டார மொழி எவ்வாறு கொஞ்சம் தவறான முறையில் உள்ளதாக மற்றவர்களுக்கு தோன்றுகிறது என்பதை நான் விவாதித்திருக்கிறேன். அது தவறு அல்ல. அவர்களின் பயன்பாடு அப்படித்தான் என்பதையும் கூறி உள்ளேன். இந்த கருத்தரங்கு மற்றும் அதைத்தொடர்ந்து நடக்கும் வடகிழக்கு மாகாணங்களின் கலாச்சார பரிமாற்றங்கள் எங்களுக்கு மிகவும் புதுமையாக உள்ளது. நன்றி!
Short url: https://clilstore.eu/cs/7944